Friday 14 August 2009

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (8)



சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (8)
பெர்லின் புலம் பெயர் வாழ்வு தொடக்க கால நினைவுகள்
- குணன்


ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலையை உலகம் உணர்ந்து கொள்ளவில்லையென்றும், விரைந்து செயலில் இறங்கி மத்தியஸ்தம் அல்லது, தலையீடு செய்யவில்லை என்ற எதிர்பார்ப்புக்களும், அதே போன்று ஏமாற்றங்களும் அனைத்துலக நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களிடையே ஏற்பட்டுத்தான் இருக்கின்றன.

ஆயினும், எந்த ஒரு தகுதி வாய்ந்த செயலிலும், எந்த ஒரு தலைவரோ, நாடோ தலையிட்டு ஒரு தற்காலிக ஏற்பாட்டையோ முன்வைக்காது, மக்கள் அழிக்கப்பட்டு, அனாதைகளாக்கப்பட்டும், விலங்குகளைப்போல் துரத்தப்பட்டு முட்கம்பி வேலிகளுக்கிடையில் முடக்கி அடைக்கப்பட்டிருப்பது வெறும் செய்தி மட்டுமல்லவே! ஒரு இனத்தின் இருப்புக்கான ஜீவமரணப் போராட்டம் என்றுதான் கூறவும் - பதிவு செய்யவும் சமகால வரலாறு காத்திருக்கின்றது!

இன்றுள்ள தமிழர் நாம், புகலிடம் பெற்று, குடிமக்கள், நிரந்தர வதிவுடமை, வேலை, வீடு, மொழியறிவு, தலை முறை விரிவாக்கம் என்ற பரவலான தகுதிகள் பெற்றுள்ளவர்களாகி வாழ்கின்றோம். இருந்தபோதிலும் நாம் பிறிதொரு நாட்டின் மக்கள், அகதி நிலைத் தகுதி கொண்டிருப்பவர்கள் என்பதையும் 'அகதி நிலை' தேடி வந்த நாட்களில் கொண்டிருந்த அனுபவங்களை முடிந்தவரையில் மறந்தவர்களாகவும் நாம் 'அகதிகள்' என்பதை முற்றாகப் புறந்தள்ளியும் நாம் வாழுகின்ற நாட்டு மக்களுக்கும் அரசுகளுக்கும் வெளிப்டுத்தியமையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதனால்தான், இவர்கள் எமது உறவுகள் என்று கூறிய 'தாயக மக்கள்' பற்றியவற்றைப் பெரிதும் கவனத்தில் எடுக்கவும் இல்லை, பெருந்தொகையில் உள்ளூர்ப் பொதுமக்கள் ஈடுபாடுகாட்டவும் இல்லை!

1983 ஆடிக் கலவரத்தின் போது போலின் நகரில் ஜேர்மனிய பொதுமக்கள், பொது அமைப்புக்கள், மனிதவுரிமை அமைப்புக்கள், தேவாலய -பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், ஐரொபிய அளவில், ஈழத்தமிழருடன் இணைந்து குரல்கொடுத்த நிலை ஏற்பட்டது, இருந்த போதிலும் 25 வருடங்களின் பின்னர், முற்று முழுதாக தமிழர் தாம் புரிகின்ற நிகழ்வுகளாக்கி நடாத்தப்பட்ட கடந்துபோன சம்பவங்களால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பது புதிய படிப்பினையாகும்!

ஐரொப்பிய நாடொன்றின் அரசியல் வாதி தமிழரின் வெளிநாடுகளில் இடம்பெற்ற எதிர்ப்புக்கள் பற்றி கருத்து தெரிவிக்கையில்,“இங்குள்ள உங்களுக்கு, ஏதாவது, குறைகள் என்றால், கூறுங்கள்,தீர்க்கிறேன் பிற நாடுகளில், நாம் தலையிட முடியாதுள்ளது!“ கூறியது கவனங்கொள்ளத்தக்கதாகும். தமிழர்கள், தம்மையும் தமது பிறந்த நாட்டில் வாழும் உறவுகளையும் அகதி நிலை தாண்டிய மாற்றங்களினால் முற்றாக மறந்துள்ள காரணத்தால், நீண்ட காலமாக வாழ்கின்ற உள்ளூர் மக்களின் மத்தியில தமது நாட்டின் அரசியல், சமூக, நிகழ்வுகளைப் பற்றிய உண்மைகளை பகிர்ந்துகொள்ளத் தவறியதால், எமக்கும் எமது உறவுகளுக்கும், ஏற்பட்டவைகள் பற்றி, இறுதி நேரத்தில் வாழும் நாட்டவர் மத்தியில் எடுத்துக் கூறிய போதும், அவற்றின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியதாகவே காணப்பட்டது!

மக்களைக் கொண்ட அங்கீகாரம் பெற்றுள்ள பொதுவமைப்புக்கள் மூலமாக, சிறிய கலந்துரையாடல்கள், தமிழர் ஆதரவுக் குழுக்கள், பல்வேறு மட்டங்களிலும் தொடராக நிதழ்த்தப்பட்டிருந்தால் அன்று எண்பதுகளில் நடந்தேறயதைவிட பன்மடங்கு ஆதரவும், அங்கீகாரமும் கிட்டியிருக்கும் என்பது எனது திடமான எண்ணம். இவ்வாறு நடக்காது போனதேன்? என்பதற்கான விடையைத்தேடி இனியாவது உணரவேண்டும்.
***************

வந்த நாட்களும் இந்த நாட்களும்

கூட்டு வாழ்க்கை பற்றிய "அரிச்சுவடிப் பாடம்" படித்ததைப் போல, அற்றை நாள் புலப் பெயர்வில், வாழ்ந்த அந்த அனுபவங்களை எவ்வாறு இலேசாக மறப்பதோ?

அறியாதவர்களாய், பயண முடிவில், சந்தித்து பின்னணி எது பற்றிய தேவை இன்றி, பேசும் தாய் மொழியாலும், தூரத்து அறிமுகப் பேர்வழிகள் சிலரின் முகவரி முகமன்களாலும், (ஓரிருவர் மட்டும் உற்ற நண்பர்கள் - என்ற உறவு கொண்டவர்கள்) "நாமெல்லோரும் ஒரு தாய் மக்கள்!" என்றவாறு, விடுதி அறைகளில் சோடி, சோடியாக ஐந்து பேருக்கு அதிகப் படாமல், அடுக்கு கட்டில்கள், பஞ்சு (கோழிச் செட்டைகளால் நிரப்பிய தென்பது பின்னர் தான் தெரியவந்தது!) மெத்தை, தலையணை, போர்வை, படுக்கை விரிப்பு (அதுவும் வாரா வாராம் மாற்றம்) இப்படி ஒரு உல்லாச விடுமுறையில் நாட்களை ஓட்ட வந்தவர்களின் அத்தனையும் கிடைக்க, ஓரிருவர் தவிர்ந்த இளைஞர்கள் குளாமுக்கு ஓரே ஆரவாரம் என்று தான் சொல்ல வேண்டும்!

அன்று வந்து, ஒருவாறு தங்க இடம் கிடைத்ததும், கேட்கும் முதலாவது கேள்வி,"நீங்ககள் வேலை செய்கிறீர்களா?" என்றதாகத்தான் இருந்தது. இதைத்தான் கேட்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நண்பர் அல்லது ஊர்-உறவு யாராக இருந்தாலும், எரிச்சலுடன், "நீ தான் இதைக் கேட்க மறந்திட்டியள் என்று எண்ணிக் கொண்டிருந்தது சரியாய்ப் போய்ச்சு!... நீயுமடாப்பா, எல்லாரையும் போலக் கேட்டிட்டாய்!" என்பதும், "புகலிடம் தேடி வருபவர்கள் இரண்டு வருடங்களுக்கு, வேலை செய்யக் கூடாது என்று தடை போட்டிருக்கிறார்களாம்!" என்பதும், "ஊர் திரும்பிப் போனாலும் அங்கே செய்த வேலையில் சேரலாம்!" என்று கூறுவதும் சாதாரணமாக நடக்கும். இதனால் சிலர், குறிப்பாக அரசிலும், வேறு நிலையான பதவிகளிலும் இருந்த சிலர் நாடு திரும்பியதுமுண்டு.

இடைத்தரகர்களின் பேச்சசைக் கேட்டு, பெருந்தொகை செலவு செய்து, பாணையும், சூப்பையும் மூன்று நேரமும் உண்பதும், கட்டில் தூக்கமும் தொடர் கதைதானோ என்ற ஏக்கம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்தது. கூட்டுச் சாப்பாட்டுத் திட்டம் (மெஸ்) கணக்கில், அவரவர் நான்கு, ஐந்து பேர்கள் கூட்டாக சமையல் செய்து சாப்பாடு சமைக்க தொடங்கிய பின்னர் வாரா வாராம் சாமான்கள் என்றால், அரிசி, உருளைக் கிழங்கு, கோழிக்கால், கோழி மாங்காய், கோழி ஈரல், தேடிவாங்கும் முறை மாறி மாறி பொறுப்பு ஏற்று, முடிந்தவரை ஆரம்பத்தில், ஐம்பது அறுபதுக்குள்(டி.எம்) முடிக்க வேண்டிய காரணம் வந்த செலவுக்கு வட்டியைத்தானும், மிச்சப்படுத்தி, மாதா மாதம் 60 முதல் எண்பது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (செக்) எடுத்து அனுப்பாதவர்களுக்கு ஊரில் இருந்து "அரிச்சனை"க் கடிதம் வரவே செய்தது! பக்கத்து வீட்டு பரமு போனவுடனேயே, செலவில் அரைவாசி அனுப்ப,"நீ, என்ன தம்பி,செய்யிறாய்?"என்று கேட்பது நியாயமான கேள்விதானே!

வாழ்க்கைப் படியாகவோ அல்லது பைக்கட் செலவும் சாப்பாடும் வழங்கிய நிலையில்,"இப்பொழுது சிறிய வேலைதான் செய்கிறேன், விசாரணை முடிந்து, நிரந்தர வேலை கிடைத்ததும் கூட அனுப்பலாம்! ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்" என்ற பதில் சென்று சேரும் வரைக்கும் எல்லோர் மனதிலும் சோகம் தான்! இப்படி, கண்களில் எண்ணெய் ஊற்றியதைப்போல, காலத்தை ஓட்டிச் சென்ற - வந்த நாட்களின் சோகங்கள் எல்லாம் - அந்த நோவுகள் எல்லாம், ஆழ்மனங்களில் துளிர்க்காமல் இருக்க முடியாது! வந்து புகுந்த நாட்களில், அன்றைய நாட்களில், காலையும் மாலையும் பைக்கட் (வெள்ளை)பாணும்; மதியம் பைக்கட் வெள்ளை அரிசிச்சோறும்(ஆளுக்கு 1 அல்லது ஒன்றரைப் பைக்கட்) ஒரே மூச்சில், யாவும் சமமாக, சாதுரியமாக, பகிர்தல் செய்யப்படுவது அன்றைய("நளபாக நாயகரின் பொறுப்பு!") எழுதாச் சட்டம்! சாப்பாட்டு வேளையில், எதிர்பாராத(புதிய) விருந்தினர், வரின், அவர்களுக்கும், அதே பைக்கட் கணக்கில், அன்னம் பரிமாறல் தவறாது! அது என்றும் எல்லோராலும், எங்கும் தமழர் நிறைந்த விடுதிகள் தோறும் நடைமுறையில் இருந்தது! உறவுகள் நட்புகள், நகர்வுகள், வதிவிட இருப்புக்களுக்கு அமைய, மாற்றம் பெறும்! பழகிய நட்பை பிரிந்ததில் துயரம் அடைவதும், புதிய வரவுகளில் இணைவதும், தொடர் கதையாகிய வேளைகளில் ஒரு சிலர் பேர்லின் நகரில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று, தமது மறுபாதியாகிய குடும்பத் துணையை நகர்த்தும் முயர்ச்சியில், ஐரோப்பாவில் வாழும் புகலிடத் தமிழர்களுக்கு வழிகாட்டினர்!

(நினைவு துளிகள் சொட்டும்....)

0000000000000000000000000000000000000000000000000000
பின்னிணைப்பு:
BOX-FOLDER-REPORT: 27-2-150
TITLE: The GDR and Third World Refugees to Western Europe
BY: Matthew Boyse
DATE: 1985-9-9
COUNTRY: Germany
ORIGINAL SUBJECT: RAD Background Report/104

--- Begin ---


RFERL

RADIO FREE EUROPE Research

RAD Background Report/104
(East-West Relations)
9 September 1985

THE GDR AND THIRD WORLD REFUGEES TO WESTERN EUROPE

by Matthew Boyse

Summary: The recent escalation of the dispute
between the GDR and Sweden over people seeking
asylum follows several recent cases in which
Soviet bloc states have served as conduits for
refugees from the Third World to Western Europe.
For a country with among the most severe border
and travel regulations in the world, the GDR has
been unusually lax about letting refugees use
East Berlin as a point of departure to the West.
This paper briefly examines the most recent
disputes between East Berlin and several Western
European countries over Third World refugees.

***

East Berlin's role as a conduit for refugees from the Third
World to Western Europe, particularly the Scandinavian countries
and the FRG but also France and the Low Countries, has led to
protests by the Swedish government. West European governments
have become increasingly annoyed during the past year by East
Berlin's allowing unprecedented numbers of refugees from South
Asia (especially Sri Lanka, Bangladesh, and Pakistan) and the
Middle East (particularly Iraq, Iran, and Lebanon) to travel
without proper documents through the GDR on their way to Western
Europe. In 1983 100 people seeking asylum arrived in the
Swedish port city of Trelleborg via the GDR, while in the first
7 months of 1985 alone the number was more than 3,000. In the
case of West Germany, Chancellor Helmut Kohl said at a press
conference on July 4 that in the first half of 1985 17,000
people had gone through East Berlin to West Berlin, where they
had asked for asylum. During the same period the GDR allowed
2,500 such refugees to proceed to Denmark.[1]

The Swedish government has accused East Berlin of not
keeping the pledge it made in late February 1985 to examine more
carefully applications for transit visas to the Swedish
mainland, one of the key provisions of which was to have......

This material was prepared for the use of the staff of Radio Free Europe/Radio Liberty.

******
note:
1 For data on people seeking asylum, see dpa, 26 August 1985; Neue Zuercher Zeitung, 22 August 1985; dpa and UPI, 5 3uly 1985; and Sueddeutsche Zeitung, 29 August 1985.
thanks: http://www.osaarchivum.org/files/holdings/300/8/3/text/27-2-150.shtml
0000000000000000000000000000000000000000000000000000000000

No comments:

Post a Comment